Pandurangar Devasthanam
Vittalapuri Komarapalayam
Activities of temple
விட்டலபுரி ஸ்ரீ பாண்டுரங்கர் தேவஸ்தானம் வருடம் முழுவதும் நடைபெற்றுவரும் உற்சவங்கள்
ஆனிமாதம்
ஆனிமாதம் : ஆஷாட சுத்தசயன ஏகாதசி திருவிழா
தசமி : கொடியேற்று விழா
ஏகாதசி : காலை 5 மணிக்கு பஜனை ஊர்வலம், இரவு நர்த்தன பஜனை நடைபெறும்.
துவாதசி : காலை காவேரி ஆற்றிற்கு சென்று திருமஞ்னத் தீர்த்தம் கொண்டுவருதல் மற்றும் கருட தரிசனம் பார்த்தல். காலை நெய்வைத்தியம் மற்றும் ஆராதனை.
ஆடிமாதம் : ஆடிபூரம் : ஸ்ரீ ஆண்டாள் ஜெயந்தி திருப்பாவை பாராயணம் பஜனை நடைபெறும்.
ஆடி 18 : ஆனித் திருமஞ்ச்னம் விழா காவேரி ஆற்றுக்கு சென்று திருமஞ்ச்னத் தீர்த்தம் கொண்டுவருதல். அபிஷேகம், நெய்வைத்தியம் மற்றும் ஆராதனை.
ஆவணிமாதம் : விழா 1 : கோகுலாஷ்டமி திருவிழா 2 நாட்கள் நடைபெறும். முதல் நாள் பஜனை ஆராதனை நடைபெறும். இரண்டாம் நாள் ஸ்ரீ கிருஷ்ண பகவான் திருவீதி உலா மற்றும் உரியடி விழா நடைபெறும்.
விழா 2 : தேவாங்ககுல பூணூல் பண்டிகை திருவிழா ( திருவோண நட்சத்திரத்தில் ரிக் உபகர்மா எனும் பூணூல் பண்டிகை )
விழா 3 : விநாயகர் சதுர்த்தி விழா அபிஷேகம் & ஆராதனைநடைபெறும்.
புரட்டாசி மாதம் : விழா 1 : பந்த சேவை நான்கு சனிக்கிழைமையும் திருக்கோடி ஏற்றி வைத்து பந்த சேவையுடன் பஜனை & ஆராதனை நடைபெறும். ஐந்தாவது சனிக்கிழமை திருக்கோடி ஏற்றி வைத்து பந்த சேவையுடன் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ பாண்டுரங்க பகவான் மேளவாத்தியத்துடன் திருவீதி உலா நடைபெறும்.
விழா 2 :விஜய தசமியில் ஸ்ரீ சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை நடைபெறும். ஐப்பசி மாதம் தீபாவளி ஸ்ரீ மகாலக்ஷ்மி பூஜை (தன ஆகர்ஷ்ண பூஜை) ஆராதனை.
கார்த்திகை மாதம் :பரணி கிருத்திகை ரோகிணி,மூன்று நாட்கள் திருக்கோடி ஏற்றி வைத்து கார்த்திகை தீப விழா நடைபெறும்.
மார்கழி மாதம்: விழா 1: கார்த்திகை மாதம் கடைசி நாளில் ஸ்ரீ ஆண்டாள் கொலு ஆரம்பித்து மார்கழி மாதம் அதிகாலைகளில் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை பாராயண பஜனை அனுதினமும் செய்து 27 ஆம் நாள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து கூடாரவல்லி உற்சவம் முதலியன செய்வித்து அந்த மாதம் முழுவதும் ஆண்டாள் கொலு நடைபெறுகிறது.
விழா 2:இதன் மத்தியில் வரும் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி ப்ரம்மோத்சவ பெருவிழா நடைபெறும்.
தசமி : காலை 5 மணிக்கு கொடியேற்று விழா மற்றும் பஜனை ஊர்வலம்
ஏகாதசி :அதிகாலை வானவேடிக்கையுடன் சுவாமி ஸ்ரீ தேவியுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பஜனைகோஷ்டியுடன் நாமாவளி பாராயணம் செய்து மங்கள வாத்தியம் முழங்க தாசர்களின் சங்கு நாதம் முழங்க பகவான் ஸ்ரீ பரமபத வாசல் (எ) சொர்க்கவாசல் பிரவேசம் செய்து மங்கள ஆராதனை பெற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அன்று பகல் முழுவதும் வைகுண்டமாய் காட்சியளிக்கும் இந்த ஆலயத்திற்கு வரும் அனைத்து பஜனை கோஷ்டிகளையும் சாதுக்களையும் பக்த்தர்களையும் வரவேற்று உபசரித்தல்.அன்று இரவு தேவஸ்தான பஜனை கோஷ்டியாரின் நர்த்தன பஜனை மிக சிறப்பான முறையில் செய்வித்து இரவு 10 மணிக்கு மங்கள ஆராதனை அதன் பின் இரவு முழுவதும் பஜனை.
துவாதசி அன்று காலை நெய்வைத்தியம் & மங்கள ஆராதனை.
விழா 3:மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசையன்று ஸ்ரீ அனுமன் ஜெயந்தி ஸ்ரீ ஆஞ்சநேயர் அபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி நெய்வைத்தியம் & மங்கள ஆராதனை.
தை மாதம்: தை 1 ஆம் நாள் விட்டலபுரி ஸ்ரீ பாண்டுரங்க தேவஸ்தானம் பஜனை கோஷ்டியார்,தாசர்களின் திருக்கூட்டம் புடைசூழ சங்கனாதத்துடனும் மங்களாவாத்தியத்துடனும் கட்டளைதாரர் அவர்கள் இல்லத்திற்கு சென்று அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண பகவானை யானை மீது அமர்த்தி மாப்பிள்ளை அழைப்பு வைபவம் செய்து தேவஸ்தானத்திற்கு அழைத்து வந்து வேத விற்பன்னர்களால் வேதங்கள் ஓதி யாகங்கள் செய்து ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ விஷ்ணு சித்தரின் அருந்தவப்புதல்வி கோதை நாச்சியாரான ஸ்ரீ ஆண்டாள் தேவியாருக்கும் அகில லோக ஏக நாயகனாய் ஆயர்பாடியில் அவதரித்த சகல ஜீவராசிகளையும் காத்து ரட்ஷிக்கும் பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் திருக்கல்யாண மஹோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.
அன்று இரவு ஸ்ரீ ஆண்டாள் கொலுவில் வைத்த முளை பயிரை பஜனை கோஷ்டியுடன் சென்று காவேரி கரையில் வைத்து திருப்பாவை முப்பதும் பாராயணம் செய்து கவேரியில் விடுதல் இத்துடன் தனுர் மாத வைபவங்கள் நடைபெறுகிறது.
மாசி மாதம் மாசி மாதம் : சிவராத்திரி பூஜை & ஆராதனை நடைபெறும்.
பங்குனி மாதம் : ஸ்ரீ ராம நவமி உற்சவம் நடைபெறும். 11 நாட்கள் காலை அபிஷேக பூஜையும் இரவு பஜனையும் ஆராதனையும் நடைபெறும். 12 ஆம் நாள் ஸ்ரீ சீதாராமன் திருக்கல்யாண மஹோற்சவம் அன்று மாலை சிறுமிகளுக்கு ஸ்ரீ சீதாதேவி ஸ்ரீ ராமர் லக்ஷ்மணர் விசுவாமித்திரர் வேடங்கள் அணிவித்து திருவீதி வலம் வந்து கன்னிமாடத்தில் சீதை நின்று ஸ்ரீ ராமரை பார்க்க ஸ்ரீ ராமரும் சீதையை பார்க்க (அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்) அழைத்து வந்து ஸ்ரீ அயோத்திய மன்னன் தசரத புத்திரர் ஸ்ரீ ராமச்சந்திர பகவானுக்கும் மிதிலாபுரி மன்னர் ஜனக மஹாரிஷி அருந்தவப் புதல்வி ஸ்ரீ சீத்தா பிடாட்டியாருக்கும் திருக்கல்யாண மஹோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.13 ஆம் நாளை ஸ்ரீ ஆஞ்சநேய உஞ்ஜவிர்த்தி ஊர்வலம் நடைபெறும்.அன்று இரவு சீதா ராமர் அனுமன் வாகனத்தில் மங்கள வாத்தியத்துடன் வெகு சிறப்பான முறையில் திருவீதிஉலா வந்து ஸ்ரீ ராம நவமி உற்சவம் நிறைவு பெறுகிறது.
கோயில் நடை திறப்பு காலை 6 மணி முதல் 10 மணி வரை.
மாலை 5 மணி முதல் 8 மணி வரை
சனிக்கிழமை கோயில் நடை திறப்பு:
காலை 6 மணி முதல் 12 மணி வரை.
மாலை 5 மணி முதல் 10 மணி வரை
விழாக்காலங்களுக்கு மாறுதலுக்கு உட்பட்டவை.
சனிக்கிழமை வாரா வாரம் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை சிறப்பு நர்த்தன பஜனை நடைபெறும்
ஆனிமாதம்
ஆனிமாதம் : ஆஷாட சுத்தசயன ஏகாதசி திருவிழா
தசமி : கொடியேற்று விழா
ஏகாதசி : காலை 5 மணிக்கு பஜனை ஊர்வலம், இரவு நர்த்தன பஜனை நடைபெறும்.
துவாதசி : காலை காவேரி ஆற்றிற்கு சென்று திருமஞ்னத் தீர்த்தம் கொண்டுவருதல் மற்றும் கருட தரிசனம் பார்த்தல். காலை நெய்வைத்தியம் மற்றும் ஆராதனை.
ஆடிமாதம் : ஆடிபூரம் : ஸ்ரீ ஆண்டாள் ஜெயந்தி திருப்பாவை பாராயணம் பஜனை நடைபெறும்.
ஆடி 18 : ஆனித் திருமஞ்ச்னம் விழா காவேரி ஆற்றுக்கு சென்று திருமஞ்ச்னத் தீர்த்தம் கொண்டுவருதல். அபிஷேகம், நெய்வைத்தியம் மற்றும் ஆராதனை.
ஆவணிமாதம் : விழா 1 : கோகுலாஷ்டமி திருவிழா 2 நாட்கள் நடைபெறும். முதல் நாள் பஜனை ஆராதனை நடைபெறும். இரண்டாம் நாள் ஸ்ரீ கிருஷ்ண பகவான் திருவீதி உலா மற்றும் உரியடி விழா நடைபெறும்.
விழா 2 : தேவாங்ககுல பூணூல் பண்டிகை திருவிழா ( திருவோண நட்சத்திரத்தில் ரிக் உபகர்மா எனும் பூணூல் பண்டிகை )
விழா 3 : விநாயகர் சதுர்த்தி விழா அபிஷேகம் & ஆராதனைநடைபெறும்.
புரட்டாசி மாதம் : விழா 1 : பந்த சேவை நான்கு சனிக்கிழைமையும் திருக்கோடி ஏற்றி வைத்து பந்த சேவையுடன் பஜனை & ஆராதனை நடைபெறும். ஐந்தாவது சனிக்கிழமை திருக்கோடி ஏற்றி வைத்து பந்த சேவையுடன் கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் ஸ்ரீ பாண்டுரங்க பகவான் மேளவாத்தியத்துடன் திருவீதி உலா நடைபெறும்.
விழா 2 :விஜய தசமியில் ஸ்ரீ சரஸ்வதி பூஜை,ஆயுத பூஜை நடைபெறும். ஐப்பசி மாதம் தீபாவளி ஸ்ரீ மகாலக்ஷ்மி பூஜை (தன ஆகர்ஷ்ண பூஜை) ஆராதனை.
கார்த்திகை மாதம் :பரணி கிருத்திகை ரோகிணி,மூன்று நாட்கள் திருக்கோடி ஏற்றி வைத்து கார்த்திகை தீப விழா நடைபெறும்.
மார்கழி மாதம்: விழா 1: கார்த்திகை மாதம் கடைசி நாளில் ஸ்ரீ ஆண்டாள் கொலு ஆரம்பித்து மார்கழி மாதம் அதிகாலைகளில் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை பாராயண பஜனை அனுதினமும் செய்து 27 ஆம் நாள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து கூடாரவல்லி உற்சவம் முதலியன செய்வித்து அந்த மாதம் முழுவதும் ஆண்டாள் கொலு நடைபெறுகிறது.
விழா 2:இதன் மத்தியில் வரும் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி ப்ரம்மோத்சவ பெருவிழா நடைபெறும்.
தசமி : காலை 5 மணிக்கு கொடியேற்று விழா மற்றும் பஜனை ஊர்வலம்
ஏகாதசி :அதிகாலை வானவேடிக்கையுடன் சுவாமி ஸ்ரீ தேவியுடன் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி வலம் வந்து பஜனைகோஷ்டியுடன் நாமாவளி பாராயணம் செய்து மங்கள வாத்தியம் முழங்க தாசர்களின் சங்கு நாதம் முழங்க பகவான் ஸ்ரீ பரமபத வாசல் (எ) சொர்க்கவாசல் பிரவேசம் செய்து மங்கள ஆராதனை பெற்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.அன்று பகல் முழுவதும் வைகுண்டமாய் காட்சியளிக்கும் இந்த ஆலயத்திற்கு வரும் அனைத்து பஜனை கோஷ்டிகளையும் சாதுக்களையும் பக்த்தர்களையும் வரவேற்று உபசரித்தல்.அன்று இரவு தேவஸ்தான பஜனை கோஷ்டியாரின் நர்த்தன பஜனை மிக சிறப்பான முறையில் செய்வித்து இரவு 10 மணிக்கு மங்கள ஆராதனை அதன் பின் இரவு முழுவதும் பஜனை.
துவாதசி அன்று காலை நெய்வைத்தியம் & மங்கள ஆராதனை.
விழா 3:மார்கழி மாதம் மூலம் நட்சத்திரம் அமாவாசையன்று ஸ்ரீ அனுமன் ஜெயந்தி ஸ்ரீ ஆஞ்சநேயர் அபிஷேகம் செய்து வடை மாலை சாற்றி நெய்வைத்தியம் & மங்கள ஆராதனை.
தை மாதம்: தை 1 ஆம் நாள் விட்டலபுரி ஸ்ரீ பாண்டுரங்க தேவஸ்தானம் பஜனை கோஷ்டியார்,தாசர்களின் திருக்கூட்டம் புடைசூழ சங்கனாதத்துடனும் மங்களாவாத்தியத்துடனும் கட்டளைதாரர் அவர்கள் இல்லத்திற்கு சென்று அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ண பகவானை யானை மீது அமர்த்தி மாப்பிள்ளை அழைப்பு வைபவம் செய்து தேவஸ்தானத்திற்கு அழைத்து வந்து வேத விற்பன்னர்களால் வேதங்கள் ஓதி யாகங்கள் செய்து ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ விஷ்ணு சித்தரின் அருந்தவப்புதல்வி கோதை நாச்சியாரான ஸ்ரீ ஆண்டாள் தேவியாருக்கும் அகில லோக ஏக நாயகனாய் ஆயர்பாடியில் அவதரித்த சகல ஜீவராசிகளையும் காத்து ரட்ஷிக்கும் பரம்பொருளான ஸ்ரீ கிருஷ்ண பகவானுக்கும் திருக்கல்யாண மஹோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.
அன்று இரவு ஸ்ரீ ஆண்டாள் கொலுவில் வைத்த முளை பயிரை பஜனை கோஷ்டியுடன் சென்று காவேரி கரையில் வைத்து திருப்பாவை முப்பதும் பாராயணம் செய்து கவேரியில் விடுதல் இத்துடன் தனுர் மாத வைபவங்கள் நடைபெறுகிறது.
மாசி மாதம் மாசி மாதம் : சிவராத்திரி பூஜை & ஆராதனை நடைபெறும்.
பங்குனி மாதம் : ஸ்ரீ ராம நவமி உற்சவம் நடைபெறும். 11 நாட்கள் காலை அபிஷேக பூஜையும் இரவு பஜனையும் ஆராதனையும் நடைபெறும். 12 ஆம் நாள் ஸ்ரீ சீதாராமன் திருக்கல்யாண மஹோற்சவம் அன்று மாலை சிறுமிகளுக்கு ஸ்ரீ சீதாதேவி ஸ்ரீ ராமர் லக்ஷ்மணர் விசுவாமித்திரர் வேடங்கள் அணிவித்து திருவீதி வலம் வந்து கன்னிமாடத்தில் சீதை நின்று ஸ்ரீ ராமரை பார்க்க ஸ்ரீ ராமரும் சீதையை பார்க்க (அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்) அழைத்து வந்து ஸ்ரீ அயோத்திய மன்னன் தசரத புத்திரர் ஸ்ரீ ராமச்சந்திர பகவானுக்கும் மிதிலாபுரி மன்னர் ஜனக மஹாரிஷி அருந்தவப் புதல்வி ஸ்ரீ சீத்தா பிடாட்டியாருக்கும் திருக்கல்யாண மஹோற்சவம் வெகு சிறப்பாக நடைபெறும்.13 ஆம் நாளை ஸ்ரீ ஆஞ்சநேய உஞ்ஜவிர்த்தி ஊர்வலம் நடைபெறும்.அன்று இரவு சீதா ராமர் அனுமன் வாகனத்தில் மங்கள வாத்தியத்துடன் வெகு சிறப்பான முறையில் திருவீதிஉலா வந்து ஸ்ரீ ராம நவமி உற்சவம் நிறைவு பெறுகிறது.
கோயில் நடை திறப்பு காலை 6 மணி முதல் 10 மணி வரை.
மாலை 5 மணி முதல் 8 மணி வரை
சனிக்கிழமை கோயில் நடை திறப்பு:
காலை 6 மணி முதல் 12 மணி வரை.
மாலை 5 மணி முதல் 10 மணி வரை
விழாக்காலங்களுக்கு மாறுதலுக்கு உட்பட்டவை.
சனிக்கிழமை வாரா வாரம் இரவு 8 மணிமுதல் 10 மணிவரை சிறப்பு நர்த்தன பஜனை நடைபெறும்